அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
கால பேதத்தாலும் உஷ்ண ஆபாசத்தாலும் தடை நேர்ந்தால், ஒளஷதி வகைகளாலும், பெளதிக மூலங்களாலும் சரபேத, அஸ்தபரிச தந்திரத்தாலும், மூலாங்கப் பிரணவத் தியான சங்கற்பத்தாலும், தடை தவிர்த்துக் கொள்ளல்.
-- இக்து வல்லளார் மொழி.
எமது சன்மார்க்க அன்பர் ஒருவர் இந்த தடைகளை நீக்க வழி அறியாது இருக்கின்றார். அவரின் தொழில் முறைகளே இதற்கு காரணம்.
அவரது தொழிலில்
"பத்து மணி நேரத்திற்கு மேலாக கணிபொறியை காண வேண்டும்.
தொடர்ந்த சித்த விருத்தி இருந்து கொண்டே இருக்க வேண்டும்
குளிர் வசதி அறையில் இருக்க வேண்டும்
ஒரே இடத்தில் அமர்ந்த வண்ணம் வேலை செய்ய வேண்டும்
விரைவில் வேலை முடிக்க வேண்டும் என்ற மன அழுத்ததொடு வேலை இருக்கும்.
இதனால் அவர் உடல் நிலை பாதிக்க பட்டு உள்ளது. அவரால் சன்மார்கத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. தொடர்ந்த தலை வலி, அஜூரன கோளாறு, மூலம் முதலியவற்றால் தொடர்ந்து பிரச்னையில் உள்ளார். மருத்துவங்கள் சரியாக எடு பட வில்லை. தொழிலை விடவும் வழி இல்லை. "
இவ்வாறு அவர் கூறுகிறார்.
இவரின் பூர்வ கர்மாக்கள் தான் இதற்கு காரணமா? இவர்க்கு சரியா ஆறுதலாக என்ன சொல்லலாம்.