XML Feed
Tamil Font Help Romanize

இந்திரிய ஒழுக்கம்   Read (777 times)
on 4/3/2008 10:16:42 AM by eshwar8
கீழ்கண்ட இந்திரிய ஒழுக்கம் பற்றி விரிவான விளக்கம் வேண்டும் ,

1. மலஜல உபாதிகளை அக்கிரமம் அதிக்கிரமம் இன்றிக் கிரமத்தில் நிற்கச் செய்வித்தல் 
2.கால பேதத்தாலும் உஷ்ண ஆபாசத்தாலும் தடை நேர்ந்தால், ஒளஷதி வகைகளாலும், பெளதிக மூலங்களாலும் சரபேத, அஸ்தபரிச தந்திரத்தாலும், மூலாங்கப் பிரணவத் தியான சங்கற்பத்தாலும், தடை தவிர்த்துக் கொள்ளல்.

3. மந்ததரம்; சுக்கிலத்தை அக்கிரம அதிகிரமத்தில் விடாது நிற்றல் 
4. தீவிரதம்; எவ்வகையிலும் சுக்கிலம் வெளிப்படாமல் நிறுத்தல்
5. சஞ்சரிக்கும் காலத்தில் காலில் கவசம் தரித்தல் 

Re: இந்திரிய ஒழுக்கம்  
on 4/3/2008 1:05:29 PM by Sathesh Kumar
(1)உரிய நேரத்தில் காலைக் கடன்களை கழிக்க வேண்டும். என்பதைத்தான் பெரூமானார் இவ்விதம் கூறியுள்ளார்.
(2)உடம்பை உஷ்ண த்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்குத்தான் பெருமானார் இவ்விதம் கூறியுள்ளார்.
(3),(4) இது போன்ற கட்டுப்பாடுகள் தீவிரமாக கடைப்பிடித்தால் தான் கைகூடும்.
(5)கிருமிகள் தாக்காது இருப்பதற்கு  வெளியில் செல்லும் காலங்களில் செருப்பு அணிந்து செல்லும்படி  பெருமானார் இவ்விதம் கூறியுள்ளார்.

சதீஷ் குமார். ச
Re: இந்திரிய ஒழுக்கம்  
on 4/4/2008 7:41:45 AM by Ramanujam

வள்ளல் பெருமான் திருக்காப்பிட்டுக் கொண்ட தினம் வெளியிட்ட அற்புதப் பத்திரிகையின் வாசகம் இதற்கு விளக்கம் அளிக்கிறது.
  உலகத்தினிடத்தே பெறுதற்கு மிகவும் அருமையாகிய மனித தேகத்தைப் பெற்ற நண்பர்களே! அறிவுவந்த காலமுதல். அறிந்தறியாத அற்புத அறிவுகளையும். அடைந்தறியாத அற்புதக் குணங்களையும். கேட்டறியாத அற்புதக் கேள்விகளையும். செய்தறியாத அற்புதச் செயல்களையும். கண்டறியாத அற்புதக் காட்சிகளையும் அனுபவித்தறியாத அற்புத அனுபவங்களையும். இது தருணந் தொடங்கிக் கிடைக்கப் பெறுகின்றேனென்று உணருகின்ற ஓர் சத்திய உணர்ச்சியாற் பெருங் களிப்புடையேனாகியிருக்கின்றேன்,
        நீவிர்களும். அவ்வாறு பெற்றுப் பெருங்களிப்பு அடைதல் வேண்டுமென்று. எனக்குள்ளே நின்று. நிறைந்து எழுந்து வெளிப்பட்ட எனது சுத்த சன்மார்க்க லட்சியமாகிய. ஆன்மநேய வொருமைப்பாட்டுரிமைப் பேராசைப் பற்றியே இதனைத் தெரிவிக்கின்றேன்.—என்கின்றார்.
    மனிதப் பிறப்பல்லாத வேறு எந்த பிறப்பிலும்  மனம் என்ற ஒரு சிறப்புப் புலன் இறைவனால் வழங்கப் படாதாதலும் 96 தத்துவ நிறைவுடைய மனித உடம்பில்தான் சிற்சபையில் ஆண்டவர் எழுந்தருளியுள்ளதாலும். ஆண்டவரை உணர்வதற்கும் பக்குவ ஜீவர்களுக்கு தகுந்த காலத்தே  சாகா வரம் பெற்று விள்ங்குவதற்கும். இந்த மனித உடம்பின் அவசியத்தை அனைவரும் நன்கு உணர வேண்டும் என்ற வகையிலும் தான் இது போன்ற , வழிமுறைகளை வள்ளல் பெருமான் வகுத்துள்ளார்.
  ஆகாரம் அரை. நித்திரை அரைக்கால். மைதுனம் வீசம். பயம் பூச்சியம் ஆகப் பெற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
     
    மேலும் தேக நஷ்டத்தின் முக்கிய காரணங்கள் என்னும் தலைப்பின்கீழ் வள்ளல் பெருமானார் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த உலகத்தில் மனிதர்களுக்குத் தேகம் சீக்கிரத்தில் நஷ்டம் அடைவதற்குக் காரணம் இரண்டு. அவையாவன. ஆகாரம்., மைதுனம். ஆகாரத்தால் 9 பங்கு நஷ்டமும் மைதுனத்தால் 1 பங்கு நஷ்டமும் உண்டாகிறது. கெளமாரம், யெளவனம் இந்த 2 பருவங்களிலும் மாத்திரம் மைதுனம் உண்டு. இந்தப் பருவங்களிலும். நோயாலும். துக்கத்தாலும். தரித்திரத்தாலும். பசியாலும். பயத்தாலும். வேறு அனந்தவகையால் உண்டாகும் துன்பங்களாலும் மைதுனம் தடைபடும். இந்தக் காலத்திலும் ஆகாரம் உண்டு. பொருந்தல். ஏகதேசம். நஷ்டமும் அப்படியேயிருக்கிறது. ஆகார விஷயத்தில். அதிக்கிரமம். அக்கிரமம். அஜாக்கிரதை. அசாதாரணம் இப்படிப்பட்ட உணவுகளை நீக்கி. சுத்த சத்துவ ஆகாரங்களைப் புசித்து. ஆயுள் விர்த்தி செய்துகொள்வது சுத்த சன்மார்க்க ஏற்பாடு.
ஆகாரம் 1 மைதுனம் 2 நித்திரை 3 பயம் 4—ஆகிய இந்நான்கிலும் அதிஜாக்கிரதையா யிருக்க வேண்டும்.
இந்த நான்கிலும் முக்கியமானவை-ஆகாரம். மைதுனம். ஆதலால். இவ்விரண்டிலும் அதனிலும் அதிஜாக்கிரதையோடு இருக்கவேண்டும்.
இந்த  இரண்டிலும் முக்கியமானது மைதுனம். ஆதலால், இந்த விஷயத்தில் எல்லாவற்றைப் பார்க்கிலும் அதிக ஜாக்கிரதையாயிருக்க வேண்டும்.
அவ்வாறு இல்லாவிடில் தேகம் அதிசீக்கிரத்தில் போய்விடும். பின்பு முக்தி அடைவது கூடாது. முக்தியடைவதற்கு இம்மானிட தேகமே தக்கதாயும். வேறு தேகத்தால் அதை அடைவது அரிதாயும் இருப்பது—ஆதலால் எவ்விதத்தாலாயினும் தேகம் நீடித்திருக்கும்படி பாதுகாக்கத்தல் வேண்டும்.