XML Feed
Tamil Font Help Romanize

வள்ளலாரின் வருகையை உறுதிப்படுத்தும் பாட்டு   Read (445 times)
on 3/11/2008 11:23:15 PM by N. Nagarajan
அன்பர்களே! வள்ளலாரின் அமுத கானத்தைத் தொடர்ந்து அவரது வருகையை உறுதிப்படுத்தும் பாட்டாக அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இவ்வரிகளை உம்மோடு பகிர்ந்து கொள்கிறேன். பாடி மகிழ்வீராக!

உங்களன்பன்

[color=purple]வள்ளலாரின் வருகையை உறுதிப்படுத்தும் பாட்டு


பூரணராய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! தன்னிறைவுத்தன்மையை நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

சுயம்பிரகாசராய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! சத் தர்ஷனமென்னும் தூய நோக்கை நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

பேருண்மையாளராய் நித்தியராய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! நித்திய ஜீவனை நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

அமிர்தானந்தராய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! ஆன்மநேய ஒருமையை நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

பேரன்பராய்ப் பேரருளாளராய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! உம் இயல்பையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

பேரறிஞராய்ப் பேரறிவாளராய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! உம் நிறைவையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

அருட்பெருவல்லபராம் சத்தியராய்ச் சத்தராய் சித்தியராயச் சித்தராய்ப் பூரணானந்தராய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! உம் இருப்பையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

பெருங்குண தயாளராய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! ஒருமை இறைநிலையாம் தனிப்பெருங்கருணையை நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

உள்ளொளி ஜோதியராய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! ஒருமை ஒளிநெறியாம் அருட்பெருஞ்ஜோதியை நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

பெருநிலைக்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! ஒருமை உயிரியலாம் கடவுட்தன்மையை நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

அருட்பேரரசராய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! உம் அவதார மகிமையை நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

நானே நானெனும் பூரணமாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! உமதெல்லா நலங்களோடும் வளங்களோடும் உம்fமையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!

மெய்வழிப்பிராண நாதராய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! என் வழியாக உம் மெய் விளங்க உம் ஜீவனையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே!
திருவருட்பிரகாச வள்ளலாராய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! சாகாக் கல்வியை நீரெனக்குத் தந்தீரே நன்றியே!
அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளாய் நீரெனக்குள் வந்தீரே நன்றியே! நானே நீயாக நீயே நானாக ஒருமைப் பெருநிலையில் ஓங்கி நின்று எல்லா உயிர்களும் இன்புற்று வாழ உம்மையேஅன்னை பூமிக்குத் தந்தீரே நன்றியே!

கோடானு கோடி நன்றியே! நீரெனக்குள் வந்தீரே நன்றியே!
கோடானு கோடி நன்றியே! உம்மையே நீரெனக்குத் தந்தீரே நன்றியே
Re: வள்ளலாரின் வருகையை உறுதிப்படுத்தும் பாட்டு  
on 3/12/2008 4:32:52 AM by V.Namasivayam
The title is misleading.  It is better titled on the basis of the contents, that is, 'thanks to Vallalar'