தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
Limitless Grace-Energy Limitless Grace-Energy
Limitless Unique Grace Limitless Grace-Energy
Sanctum Sanctorum
“வான் கலந்த மாணிக்கவாசக…” – என்பது, மாணிக்கவாசகப் பெருமானின் முத்தியனுபவத்தைக் குறிக்கின்றது. இஃது மீண்டும் பிறவாமையாம்.
“வான்செய்து கொண்டது நான்செய்து கொண்டேன்…” - என்பது முத்திக்கும் மேலான, நம் வள்ளற் பெருமானின் முடிவான முத்தேக சித்தியனுபவம். இஃது, என்றும் இறவாமையாகும்.
இதோ அருட்பா ஆதாரம்;
066 ஆறாம் திருமுறை / பற்றறுத்தல் / மெய் இன்பப் பேறு
10. மன்செய்து கொண்டசன் மார்க்கத்தில் இங்கே
வான்செய்து கொண்டது நான்செய்து கொண்டேன்
முன்செய்து கொண்டதும் இங்ஙனங் கண்டீர்
மூவகை யாம்உடல் ஆதியை நுமது
பொன்செய்து கொண்ட பொதுவினில் ஆடும்
பொன்னடி காணப் பொருந்திக் கொடுத்தேன்
என்செய்து கொண்டாலும் செய்துகொள் கிற்பீர்
எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
ஆகலில்,
வான்கலந்து கொள்ளல் இனிப்பிறவாமை என்பது
வான்செய்து கொள்ளல் என்றுமிறவாமை என்பது
வான்கலந்து கொள்வதை முத்தியென்று அறிந்தே
வான்செய்து கொள்வதை சித்தியென்று அறிகவே
வான்கலந்த குடியென்பது கோன்கண்ட குடியாம்
வான்செய்த குடியென்பது கோன்கொண்ட குடியாம்
கோன்கண்ட குடியாகி வான்கலந்தே நாம்கரையாது
கோன்கொண்ட குடியாகி வானாவோம் வான்வழியே!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
Limitless Grace-Energy Limitless Grace-Energy
Limitless Unique Grace Limitless Grace-Energy
Sanctum Sanctorum
எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே ஏத்து
All Possible, I swear on Divine Abode
Exalt HIM - the Almighty only
அனைத்து உயிர்களுக்கும் அருட்சுகம் உண்டாகட்டும்!
அருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்!
Let all living beings gain Grace-Bliss!
Let the Grace-Feet reign Grace-Rule!
நன்றி, வணக்கம், சுபம்.
அன்புடன்,
அன்பன் துரை சாத்தணன்