அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
ஊன்கொண்ட புண்ணிடத்தே மிகவலிந்து மதிமயங்கிஅதுவே
நான்கண்ட வாழ்வென்றும் மகிழ்வென்றும் இம்மண்ணிடத்தே
கண்கெட்டுத் தன்கூட்டுக் கருவியெலாம் கருகிக்கெட்டுஇங்கே
புண்பட்டு மண்புதைபட்டுப் போனாலும் போகாதேசெய்வினை!
போகாத செய்வினை யெலாம் அணுப்பொழுதில்
போக்கும் இடம்உண்டு; அதுபோக்கு வரவற்றஇடம்!
அக்காக்கும் இடம்கண்டால் கணப்பொழுதாம் ஓர்யுகம்
நம்வாக்கும் மனமும் வரப்படனும் அருளிடத்தேஅதற்கு!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
எல்லாம் வல்லான் தனையே ஏத்து
எல்லா உயிர்களும் இன்புற்றுவாழ்க!
வள்ளல் மலரடி வாழ்க! வாழ்கவே!
திருச்சிற்றம்பலம்
அன்பன் துரை
கணப்பொழுதாம் ஓர்யுகம் - deathlessness!!