Anandha Barathi
ஒழிவிலொடுக்கம் மூலமும் உரையும் - ஒலி நூல் வடிவம் (Audio MP3 Book)
ஒழிவிலொடுக்கம் மூலமும் உரையும்

நூலாசிரியர்: திருஞானசம்பந்த சுவாமிகள் திருவருள் பெற்ற சீர்காழி கண்ணுடைய வள்ளல்

உரையாசிரியர்: திருப்போரூர் சிதம்பரசுவாமிகள்

பதிப்பாசிரியர்: திருஅருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகள்

                                                           ஒலிநூல்குரல்: ஆனந்தபாரதி.



பொதுவிலுபதேசம் - முதல் அதிகாரம்:

ஆசாரியத் தன்மை, சீடத்தன்மை:

பாடல் 0 - சிறப்புப் பாயிரம்
பாடல் 1 - குரு தோத்திரம் , திருஞான சம்பந்தசுவாமிகளின் பெருமை
 பாடல் 2 - தற்போதம் நீங்க குருவின் திருவருள் அவசியம் வேண்டும் .
பாடல் 3 - உண்மை குருவை கண்டுகொள்வதும் அவரின் பெருமையும்.
பாடல் 4 - குருவை அல்லாதாரை பற்றுவதால் உண்டாகும் பாவம்
பாடல் 5- உண்மை குருவே தத்துவ நிக்கிரக முதலிய அனுபவத்திற்க்கு வழிகாட்ட இயலும் என்றி நிறுவுதல்
பாடல் 6 - உண்மை அனுபவம் இல்லாதார் ஞான உபதேசம் பிறர்க்கு செய்யின் அது அவர்க்கு பாவமாகும் என்றது.
பாடல் 7 - ஞானகுருவின் உபதேசத் தன்மை
 பாடல் 8 - ஞானகுருவின் உபதேச காலமும் , சீடன் அதைக் கேட்கும் முறையும்
 பாடல் 9 - ஞானகுரு திருவாக்கின் சிறப்பு
பாடல் 10 - ஞானகுரு திருவாக்கின் சிறப்பு
பாடல் 11 - ஒழிவிலொடுக்க நூல் திருஞானசம்பந்தர் தனக்கு உபதேசமாகக் கூறியது என்றது (நூல் மரபு)
பாடல் 12- ஒழிவிலொடுக்க நூல் இறைவனை அடையும் வழியினை பக்குவர்க்கு வெளிப்படையாக தெரிவிக்கின்றது என்றது.
பாடல் 13- ஒழிவிலொடுக்க நூல் பயன் கூறுதல்
பாடல் 14 - ஒழிவிலொடுக்கம் உபதேச கலையாகிய ஞான நூல் என்று கூறியது
பாடல் 15 - ஒழிவிலொடுக்கம் அதிபக்குவம் உடைய பக்குவர்களுக்கே பயன்படும் என்றது.
பாடல் 16 - ஒழிவிலொடுக்கம் நூலினை கேட்கும்/கற்கும் முறை
பாடல் 17 - ஒழிவிலொடுக்கம் நூல் அவைஅடக்கம்
பாடல் 18 - ஒழிவிலொடுக்கம் நூல் இலக்கண வரம்பிற்கு உட்பட்டது இல்லை எனக்கூறுதல்
பாடல் 19 - இறைவனை குறிப்பினால் குரு உணர்த்த அறியலாம் என்றது.
பாடல் 20- இறைவனை குறிப்பினால் குரு உணர்த்த ஞானத்தால் அறியலாம் என்றது.
பாடல் 21 - பக்குவம் இல்லாதாரின் மாயா உபதேசங்களை கேட்பின் கேட்பவர்க்கும் பாவம் உண்டாகும் என்றது.
பாடல் 22 - பக்குவர்க்கு உரிய இலக்கணம் இது என்றது.

பதி பசு பாசம் ஆகியவற்றின் தன்மைகள்:

பாடல் 23 - பதி (இறைவன்) நிச்சயம் கூறல்.
பாடல் 24 - பதி (இறைவன்) இலக்கணமும் அவர் ஐந்தொழில் செய் விதமும்.
பாடல் 25 - தற்போத ஒழிவில் பதியும் (இறைவன்) ஆன்மாவும் ஒன்றுபட்டு இருக்கும் என்றது.
பாடல் 26 - பதியின் (இறைவன்) அருட்சத்தியின் தன்மை
பாடல் 27 - ஆன்ம ஞான பெற்றவிடத்தில் பதிக்கும் (இறைவன்) ஆன்மாவிற்கும் இடம் ஒன்றே எனல்.
பாடல் 28 - ஆன்மா சார்போதன் என்று உணர்த்தியது.
பாடல் 29 - இறைவனை எதிரிட்டு அறிய இயலாது என்றது.
பாடல் 30 - இறைவனை அறிய ஆணவ மலமே தடை என்றது.
பாடல் 31 - ஆன்மாக்கள் கன்மத்திற்க்கு ஈடாக நடத்தப்படும் என்றது.
பாடல் 32 - ஆன்மா இது தான் என்று அறிவித்தது.
பாடல் 33 - ஐந்து தொழில்களால் உயிருக்கு ஐந்து அவத்தைகள் நடைபெறுகின்றன எனல்.
பாடல் 34 - ஐந்து அவத்தைகளினால் பாதிக்கப்படாது இருக்க உபாயம்.
பாடல் 35 - ஐந்து அவத்தைகளினால் சிவ ஞானிகள் பாதிக்கப்படார்கள் என்றது.
பாடல் 36 - சிவயோகி உபதேசிக்கும் பொருட்டு நீ, நான் என பேதம் கூறினும், அப்பேதம் அவருக்கு இல்லை என்றது.
பாடல் 37 - ஆன்மா தன்னை உணரும் நிலையில் வேறு அனுபவங்கள் தோன்றாது என்றது.
பாடல் - 38 - ஆன்மா தன்னை சிவத்தில் இருந்து பிறித்து அறியாமல் இருப்பதுவே பக்குவம் பெற வழி என்றது.
பாடல் - 39 - ஆன்மா தன் சிற்றறிவால் சிவத்தை ஊன்றி அறிய இயலாது என்றது.
பாடல் - 40- ஆன்மாவானது சிவத்தை தன்னிடம் இருந்து பிரித்தறிய ஆணவ மலமே காரணம் என்றது.
பாடல் - 41 - ஆன்மா சிவத்தோடு கலந்த அத்துவிதம் இது எனக்கூறியது.
பாடல் - 42- வேத முடிவாகிய சிந்தாந்தமே முத்திக்கு வழி காட்டும் என திருஞானசம்பந்தர் உபதேசித்தது.
பாடல் - 43 - திருஞானசம்பந்தர் தனக்கு அருளிய அருளனுபவத்தை வாக்கு முதலியவற்றால் கூற இயலாது என்றது.
பாடல் - 44- திருஞானசம்பந்தர் தனக்கு “அருளே நாம்” என அருளிச்செய்தமை.
பாடல் - 45 - திருஞானசம்பந்தர் தனக்கு ஞானத்தை அறிவித்தலால் தான் அறிந்தேன் என்றது.
பாடல் - 46- ஆணவ, கன்ம, மாயைகளின் நீக்கமே உண்மை நிஷ்டை என்றது.
பாடல் - 47 - ஆன்மபோதம் ஜீவியாது அசைவற்ற நிலையே அருள் நிலை என்றது.
பாடல் - 48 - 36 தத்துவங்களும் நீங்கி, அருளையும் பரையையும் ஆணவ மல வாசனை அற கடந்த நிலையில் சிவாந்தம் தோன்றும் என்றது.
பாடல் - 49 - முத்தி நிலையில் ஆன்மா தன்னையும் சிவத்தையும் பிறித்தறியக் கூடாது என்றது.
பாடல் - 50 - தத்துவ நிக்கிரகம் முதலிய நிலைகளின் ஆனந்தம் தோன்றும் எனவே அவற்றையும் கடந்து சிவத்தோடு அத்துவிதமாய் நிற்க வேண்டும் என்றது.
பாடல் - 51 - சகல,கேவல நிலையில் இருந்து கொண்டு நிட்டை கூறுதல் ஆகாது என்றது.
பாடல் - 52 - சிவாத்வைதத்தில் சிந்தாந்த வேதாந்த பேதம் இல்லை என்றது.
பாடல் - 53 - உலகியல் ஆசாரங்கள் சிவ ஞானிகளுக்கு இல்லை என்றது.
பாடல் - 54 - தவம் முதலிய ஆசாரங்கள் சிவ ஞானிகளுக்கு இல்லை என்றது.
பாடல் - 55 - பாவமும், அசுத்தமும் சிவ ஞானிகளுக்கு இல்லை என்றது.
பாடல் - 56 - உலகத்தாரின் இகழ்ச்சியும், புகழ்ச்சியும், ஞானிகள் தாக்காது என்றது.
பாடல் - 57 - சன்மார்க்கம் நிறைவாக உள்ள நான்கு மார்க்கங்களையும் திருஞானசம்பந்தப் பெருமான் தனக்கு அருளிச்செய்தமையைக் கூறியது.
பாடல் - 58 - சிவஞானிகளுக்கு பக்தியும் தொண்டும் செய்வோர் முத்தி, சித்தி இன்பங்களை அடைவார்கள் என்றது.
பாடல் - 59 - இறைவன் திருவடியை அடைந்தோர்க்கே சிவபோகம் அனுபவிக்க இயலும் என்றது.
பாடல் - 60 - சிவஞானிகளுக்கு கிரியை முதலியவை அவசியம் இல்லை மற்றவர்களுக்கு அவசியம் என்றது.
பாடல் - 61 - தீவிரதர பக்குவர்க்கு குருவின் உபதேசமே போதும் மற்றையர்க்கு உபதேசத்தோடு வேதாகமங்களால் உணர்த்த வேண்டும் என்றது.
பாடல் - 62 - பரையோகத்தில் நிற்கும் சிவயோகியே சீவன் முத்தராவர் என்றது.
பாடல் - 63 - சிவஞானம் இல்லாதவர்களுக்கு சிவ வேடத்தால் பயன் இல்லை என்றது

முதல் அதிகாரம் பொதுவிலுபதேசம் முற்றும்.

சத்திநிபாதத்து உத்தமர் ஒழிவு – அதிகாரம் 2:

பாடல் - 64 - நான்கு பாதம், அதற்குரிய பதம், அதில் உயரிய ஞான பாதத்திற்குரிய நால்வரின் இலக்கணம் முதலியவற்றை ஞானசம்பந்த பெருமான் தனக்கு அருளிச் செய்தார் என்றது.
(இரண்டாம் அதிகாரம் சத்திநிபாதத்து உத்தமர் ஒழிவு தலைப்பின் விளக்கமும் இங்கே காண்க.)
பாடல் - 65 - திருஞானசம்பந்த பெருமான் ஆனந்தாதீதராய் எழுந்தருளி தெய்வ வாக்கின் வழி தனக்கு உபதேசம் அருளிச் செய்தார் என்றது.
பாடல் - 66 - நால்வகை பக்குவத்தாற்கு ஞானாச்சாரியர் உபதேசிக்கும் முறை இது என்றது.
பாடல்  - 67 - அறிவு முதிர்ந்தோர் விடயங்களில் செல்லாது போதத்தை அடக்கி, சிவானந்தத்தில் செல்வார்கள் என்றது.
பாடல் - 68 - பதி, பசு, பாசம் ஆகியவற்றின் இலக்கணங்களை அறிந்தும் சிவானுபவம் அடைய முயற்சி செய்யாதார் அறிவு பயனற்றது என்றது.
பாடல் - 69 - ஞானசாத்திரங்களை கேட்டும் அதன்படி நடவாது விடயச்சேற்றில் அழுந்துவது குற்றம் என்றது.
பாடல் 70 - ஞானாசாரியர் உபதேசம் கூறுமிடத்து சீடன் சகல கேவலங்களில் தாக்கற்று நின்று கேட்பின் மூவகை வினைகளும் அறும் என்றது.
பாடல் 71 - ஞான பாதத்தில் உள்ள பக்குவர்கள் நால்வகையினர் என்றது.
பாடல் 72 - உலக போகங்களில் பற்று நீங்கிய பக்குவர்களுக்கே ஞானகுருவைத் தேடும் நாட்டம் உண்டாகும் என்றது.
பாடல் 73 - ஞானகுருவை விரும்பி தேடும் மாணாக்கர்க்கு உண்டாகும் எண்வகை குணங்கள் இவை என்றது.
பாடல் 74 - ஞானகுருவை விரும்பி தேடும் மாணாக்கர்க்கு உண்டாகும் பத்து அவத்தைகள் இவை என்றது.
பாடல் 75 - ஞானகுருவை மாணாக்கர் வணங்கும் முறையும், அவர் அருளும் அருவகை தீக்கைகளும் இவை என்றது.
பாடல் 76 ஞான ஆச்சாரியர் சீடர்க்கு தீக்கையினால் தற்போதத்தை நீக்கும் முறைமை இது என்றது.
பாடல் 77 - ஞானகுரு மாணாக்கர்க்கு அளிக்கும் உபதேசத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ளும் முறை இது என்றது.
பாடல் 78 - ஞானகுரு அளித்த உபதேசத்தை ஏற்றுக்கொண்ட பக்குவர் ஒழியாமல் ஒழியும் முறையை கண்டது இவ்வாறு என்றது.
பாடல் 79 - ஞானகுரு அனைவருக்கும் ஒருமுறையாய் உபதேசிக்கினும் மாணாக்கரின் பக்குவ தரத்திற்கு ஏற்பவே பரிபாகம் உண்டாகும் என்றது.
பாடல் 80 - மந்த பக்குவர்க்கு ஞானம் தோன்றும் முறை இவ்வாறு என்றது.
பாடல் 81 - மந்ததர பக்குவர்க்கு ஞானம் தோன்றும் முறை இவ்வாறு என்றது.
பாடல் 82 - தீவிர பக்குவர்க்கு ஞானம் தோன்றும் முறை இவ்வாறு என்றது.
பாடல் 83 - தீவிரதர பக்குவர்க்கு ஞானம் தோன்றும் முறை இவ்வாறு என்றது.
பாடல் 84 - பக்குவர்க்கு பாசம் இவ்வாறு நீங்கும் என்றது.
பாடல் 85 - பக்குவர்க்கு பாசம் நீங்கிய போது உண்டாகும் அதிசய குணங்கள் இவை என்றது.
பாடல் 86 - பக்குவர்க்கு உண்டாகும் அனுபவம் பிறர்க்கு அதிசயமாய் தோன்றும் என்றது.
பாடல் 87 - பாசத்தை நீக்கி பதியை அடைந்தோரை மீட்டும் பாசங்கள் தாக்கா என்றது.
பாடல் 88 - பாசத்தை நீக்கி பதியை அடைந்தோர்க்கு வேறு சார்புகள் இல்லை என்றது.
பாடல் 89 - பாசத்தை நீக்கிய பக்குவரை வேறு சார்புகள் பற்றாவண்ணம் பதி தன்னுள் முழுவதும் ஐக்கியம் கொள்ளும் என்றது.
பாடல் 90- ஞானிகள் அடைந்த சிவபோகத்தை இங்ஙனம் என்று அவர்களால் குறிப்பிக்க முடியாது என்றது.
பாடல் 91 - பரஞானத்தை அடைந்த ஞானிகளுக்கு வேதாகம அனுபங்கள் யாவும் சரியே என்றது.

இரண்டாம் அதிகாரம் சத்திநிபாதத்து உத்தமர் ஒழிவு முற்றும்.

யோகக் கழற்றி – அதிகாரம் 3:

பாடல் 92 - யோகத்தில் ஆதார தலங்களில் அழுந்தினால் மீளுவதும் மீட்பதுவும் கடினம் என்றது.
பாடல் 93- யோகத்தால் பிறப்பினை நீக்க இயலாது என்றது.
பாடல் 94 - கிரியா யோகம் முதலியவற்றால் ஆன்ம ஞானம் சித்திக்காது என்றது.
பாடல் 95- கோவல சகல நிலைகள் தாக்காது அருள் வடிவாய் நிற்றலுக்கு உபாயம் இது என்றது.
பாடல் 96 - தத்துவங்களை தன்மேல் முட்டாக மூடிக்கொண்டு சமாதிகூடுவது சரியன்று என்றது.
                   (யோகக் கழற்றி அதிகாரத்தை எப்படி புரிந்துகொள்வது? என்பதன் விளக்கமும் இங்கு காண்க)
பாடல் 97- ஆதார மூர்த்திகள் தரிசனமும், விந்து நாத தரிசனமும் பொருளன்று என்றது.
பாடல் 98 - தற்போதத்தால் தியானிப்பதால் யோகிகளுக்கு பயன் இல்லை என்றது.
பாடல் 99 - கிரியா யோகத்தால் தவசி தன்னை கருவிகளில் மறைத்துக்கொள்வது கூடாது என்றது.
பாடல் 100- சிவத்தை அடைய அருளை முன்னிட்டு அதன்வழி ஆன்ம போதம் பின்னிட்டு செல்ல வேண்டும் என்றது.
பாடல் 101- சட யோகத்தால் அருள் நிலை தோன்றாது என்றது.
பாடல் 102 - சட யோகத்தால் மனாதிகளைக் கடந்த பூரணத்தை அடைய இயலாது என்றது.
பாடல் 103- மனாதிகளைக் அசையாது நிறுத்துவதால் மூடமாய் நிற்பதால் பயன் இல்லை என்றது.
பாடல் 104 - மனத்தையும் பிராணனையும் பிரம்மரந்திரத்தில் நிற்கச்செய்வது முத்தியன்று என்றது.
பாடல் 105 மனத்தை ஆன்மா தன் போதத்தால் அடக்க இயலாது என்றது.
பாடல் 106 - மனத்தை ஆன்மா தன் போதத்தால் ஒரு கணம் அடக்க இயலுமா? என வினவி, அன்று என மறுத்தது.
பாடல் 107 - திருவருளுக்கு இடமாக நம்மை நிறுத்தினால் கரண மயக்கங்கள் ஆன்மாவை பற்றாது என்று உபாயம் கூறியது.
பாடல் 108- கரணங்கள் அடக்க முயற்சித்தால் மேன்மேல் எழும் எனவே திருவருளுக்கு இடமாய் இருந்து அவற்றை அடக்கு என உபாயம் கூறியது.
பாடல் 109 - திருவருளை தனக்கு அன்னியமாய் எதிரிட்டு நோக்காது, அதுவே தானாய் அத்துவிதாமாய் பார்க்க அதன் நிறைவில் கருவி கரணங்கள் நீங்கும் என்றது.
பாடல் 110 - தற்போதத்தை திருவருள் போதத்தால் அடக்கினால் கருவி கரணங்கள் அடங்கும் என்றது.
பாடல் 111 - கருவிகளும் போதமும் கடந்த சுத்த நிலையில் நின்றால் ஆனந்த லாபம் உண்டு என்றது.
பாடல் 112 -தற்போதம் நீங்கிய நிலையில் ஆன்ம ஞானம் தோன்றும் என்றது.
பாடல் 113 - பிரபஞ்சம் முதலிய எல்லாவற்றையும் பகுத்து அறியாது திருவருள் வடிவாய் காண்க என்றது.
பாடல் 114- ஞானிகள் ஆன்மாக்களுக்கு அத்துவித உண்மையைக்காட்டிக் கொடுத்தாலும், அது பழக்கவசத்தால் துவித பாவனையில் நிற்கும், இது சரிஅன்று என்றது.
பாடல் 115 - ஆன்மபோதம் அசையாது அத்துவிதமாய் இறைவனை நோக்கு என்றது.
பாடல் 116 - ஞானயோகத்திற்கு உபாயம் இவைகள் என்றது.
பாடல் 117 கிரியை முதலான யோகத்தில் பழகுவோர் அந்த பழக்கத்தை நீக்கி ஞானயோகத்தில் பழகினால் சிவானுபவம் பெறலாம் என்றது. 
பாடல் 118 - தற்போதம் நீக்கி அருள்வழி வருவோரை இறைவன் முழுவதும் தன்மயமாய் ஆக்கிக்கொள்வான் என்றது.
பாடல் 119 - நூலறிவினால் தான் பிரமம் என்போர்க்கு தற்போதம் நீங்காது என்றது.
பாடல் 120 - தியானத்தில் ஓர் உருவத்தை தியானித்தும் பிறகு அதைவிடுத்து வேறு உருவத்தை தியானிப்பது முதலிய செய்கைகளை ஞானபக்குவன் செய்யலாகாது என்றது.
பாடல் 121- அபக்குவராய் இருந்த தன்னை திருஞானசம்பந்தர் திருவடி தீட்ஷை அருளி என்னை உய்யக்கொண்டார் என்றது.

யோகக் கழற்றி – அதிகாரம் 3 – முற்றும்.

கிரியைக் கழற்றி - – அதிகாரம் 4:


பாடல் 122 - கிரியையாளரைப் பார்த்து ஞானிகள் நடையை எடுத்துக்காட்டி, ஞான நிலையை பின்பற்றுக என்றது (அதிகார விளக்கம் முன்னுரை)
பாடல் 123 - கிரியையை நீக்கி ஞானம்பெற விரும்பும் சீடனின் தற்போதம் அடங்குமாறு உபதேசிக்கும் குருவே ஞானகுரு என்றது.
பாடல் 124 இறைவனின் தன்மைகளை அறிந்தும் அதை உணராது கிரியையில் செல்வோர்க்கு அறிவுறுத்தியது.
பாடல் 125- கிரியாகுரு உபதேசத்தால் ஆன்மலாபம் இல்லை என்றது.
பாடல் 126 - ஞானிகள் கிரியை முதலானவை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றது.
பாடல் 127 - கிரியை நீங்கி அதன் நிறைவில் தோன்றியதே ஞானம் அதனால் ஞானிகளுக்கு கிரியை செயதல் அவசியம் அன்று என்றது.
பாடல் 128 - கிரியை செய்யும் காலத்தில் தெய்வகதியாய் ஞானம் தோன்றினாலும் கிரியையின் மேலுள்ள பழக்கத்தால் தோன்றிய ஞானம் நிலைபெறாது மறையும் என்றது.
பாடல் 129 - கிரியை செய்யும் காலத்தில் கருவி கரணங்கள் அசைந்து தொழில் படுவதால் இவற்றை கடந்த இறை நிலையை இம்முறையை கொண்டு அடைய இயலாது என்றது.
பாடல் 130 - தொழில் ஒழிவில் நின்ற ஞானிகளைக் கண்டு அவர் போல் நிற்றி என்றது.
பாடல் 131 - கிரியையாளரின் செய்கைகள் ஞானிகளுக்கு பரிகாசமாய் தோன்றும் என்றது.
பாடல் 132- சாத்திர அறிவினால் ஞான நிலைக் கைகூடாது என்றது.
பாடல் 133 - அறிவையும் அருளையும் கடந்து நிற்கும் சிவத்தை தற்போதத்தால் செய்யும் கிரியைகளால் அடைய முடியாது என்றது.
பாடல் 134 - தற்போத ஒழிவை அடந்தவர்க்கே சிவஞானம் வாய்க்கும் என்றது.
பாடல் 135- தற்போத ஒழிவை பெறுவதற்கு உபாயம் இது என்றது.
பாடல் 136 - தற்போதம் சீவியாது அருளில் மறைந்து நிற்றற்கு உபாயம் இது என்றது.
பாடல் 137 - தற்போதத்தை சிவத்துக்கு கொடுத்து அந்த சிவத்தில் அசைவற நிற்றலே முத்திக்கு வழி என்றது.

கிரியைக் கழற்றி – அதிகாரம் 4 – முற்றும்.

சரியைக் கழற்றி - – அதிகாரம் 5:

பாடல் 138 - உண்மை முத்தியை பெறுவதற்கு சரியை முதலானவை சரியான வழியன்று என்றது.
பாடல் 139 - சரியை குருவின் உபதேசங்கள் முத்திப்பயன் தராது என்றது.
பாடல் 140- ஆன்மாக்கள் தங்களின் அற்ப சுதந்திரத்தால் முத்தி அடைய இயலாது என்றது.
பாடல் 141 - அகத்தில் ஞானமில்லாமல் தவசிபோல் புறவேஷம் கட்டுவதால் பயன் இல்லை என்றது.
பாடல் 142 - ஞான நிட்டை கைகூடாதவர் ஞானியைப்போல் வெளியில் நடிப்பதெல்லாம் மாயையின் மயக்கம் என்றது.
பாடல் 143 - அகத்தில் ஞானமில்லாமல் ஞானியைப்போல் வெளியில் நடிப்பவர்க்கு அவ்வேடத்தால் உலக இன்பம் கிடைக்குமே அன்றி முத்தி இன்பம் கைகூடாது என்றது.
பாடல் 144 - பிறவிப்பித்துன்பம் பொறாமல் ஞானத்தில் விருப்பம் கொண்ட மாணாக்கனுக்கு ஞான ஆச்சாரியர் கூறுவது இது என்றது.
பாடல் 145 பேரின்பம் ஆன்மாவை விட்டு நீங்காது, அதனைப் பெறுவதற்கு உபாயம் இவை என்றது.
பாடல் - 147 - தற்போத நீக்கத்தை பெற்ற நிலையே பேரின்பம் தோன்றும் இடம் என்றது.
பாடல் - 148 - கருவிகளை உள்ளபடி அருளால் அறிந்து அருள்மயமாய் இருந்தால் அவற்றினால் மயக்கம் உண்டாகாது என்றது.
பாடல் - 149 - திருவருளைப் பெறுவதற்க்கு உடலை நீக்க வேண்டும் என்னும் அவசியம் இல்லை என்றது.
பாடல் - 150- சிவாத்வைதம் அடைந்தவர்க்கு வேதாந்த சித்தாந்த முத்தி என்கின்ற பேதம் இல்லை என்றது.
பாடல் - 151 - தற்போதம் அற்று, கருவி கரணம் நீங்கி சும்மா இருந்தால் முத்தி நிச்சயம் என்று ஞானசம்பந்தப் பெருமான் உபதேசித்தது.

சரியைக் கழற்றி - – அதிகாரம் 5 முற்றும்.

விரத்திவிளக்கம் - அதிகாரம் 6:

பாடல் - 152 - ஆன்மாக்கள் சார்ந்ததின் வண்ணமாகும் தன்மையது என்று ஞானசம்பந்தப் பெருமான் உபதேசித்தது. (ஒழிவிலொடுக்கத்தின் 6ஆம் அதிகாரம் விரத்திவிளக்கம் ஆகும், இதன் அதிகார விளக்கமும் இங்கு காண்க.)
பாடல் - 153 - உண்மைத் துறவியரை ஆறுவகைச் சமயத்தாரும் போற்றி அங்கீகரிப்பர் என்றது (திருக்குறளின் அதிகாரம் காட்டல்)
பாடல் - 154 - தேகம், உணவு முதலிய விடய இச்சையை நீக்கியோர்க்கே இன்னூல் பயன் தரும் என்றது. (நூலும், அதிகாரப் பயனும் இது)
பாடல் - 155- பாசங்களாகிய மும்மலம் நீங்கினால் ஆன்மாவிற்கு இடம் இறைநிலை என்றது.
பாடல் - 156 - கருவி கரணங்களை தான் (ஆன்மா) அன்று என உணர்ந்தால் திருவருள் தோன்றும் என்றது.
பாடல் - 157- ஆன்மாக்களின் சொரூப, ரூப, சுபாவங்கள் இவை என்றது.
பாடல் - 158- பதியின் (இறைவனின்) சொரூப, ரூப, சுபாவங்கள் இவை என்றது.
பாடல் - 159 - சுத்தத் துறவியரின் இலக்கணம் இது என்றது.
பாடல் - 160- சுத்தத் துறவியர்கள் உலகவாதனையால் தாக்கப்படார்கள் என்றது.
பாடல் - 161- ஆன்மாக்கள் சத்து விசாரம் செய்து உண்மை விளக்கம் பெறவேண்டும் என்றது.
பாடல் - 162 - கருவி கரணங்களின் உண்மையை விசாரித்து அறிந்தபின் உலகவாதனைக் காட்சி மாத்திரமாய் தோன்றும் என்றது.
பாடல் - 163- கருவி கரணங்களின் உண்மையை விசாரித்து அறிந்த தெளிவே ஞானம் என்றது.
பாடல் - 164 - வாசக ஞானிகளியும் அனுபவ ஞானிகளியும் உள்ளபடி உணர உபாயம் இது என்றது.

விரத்திவிளக்கம் - அதிகாரம் 6 முற்றும்.

துறவு:

பாடல் - 165 - உண்மைத் துறவியர்களுக்கு உலக உறவுகள் பொய்யாத் தோன்றும் என்றது.
(துறவு அதிகாரம் விளக்கமும் இங்கு காண்க.)
பாடல் - 166 - அரி பிரமாதியர் வாழ்வும் அநித்தியம் என்றது.
பாடல் - 167 - பட்டினத்தார், பத்திரக்கிரியார் துறவின் சிறப்பு இது என்றது.
பாடல் - 168 - போகப்பற்றையும் தேகப்பற்றையும் நீக்கி ஞானத்தில் நிற்போர்க்கே இனி பிறப்பில்லை என்றது.
பாடல் - 169 - உண்மைத் துறவியருக்கு பொருளாசை கூடாது என்றது
பாடல் - 170 - செல்வம், இளமை, உடம்பு ஆகியவற்றின் நிலையாமையை உணர்ந்து தற்போதம் நீக்குவதே உண்மைத் துறவு என்றது.
பாடல் - 171 - நிராசையே பேரின்பம் பெற வழி என்றது.
பாடல் - 172 - தற்போத நீக்கமே உண்மைத்துறவின் நிலை என்றது.
பாடல் - 173 - தற்போதம் அகன்ற ஞானியர்களுக்கு ஐம்புலன்களால் வரும் துன்பம் இல்லை என்றது.
பாடல் - 174 - தனு கரண புவன போகங்களில் பற்றின்றி இருக்க வேண்டும் என்றது.
பாடல் - 175- துறவு நெறியில் தலைப்படுவோர்க்கு தேகாதி இச்சைகள் ஆகாது என்றது.
பாடல் - 176- ஆணவமல நீக்கமே உண்மைத் துறவின் இலக்கு என்றது.
பாடல் - 177 - உத்தம பக்குவர்க்கு குடும்ப வாதனைக் கூடாது என்றது.
பாடல் - 178 - அனித்திய விவேகம் வருவதே துறவுக்கு முதல் நிலை என்றது.
பாடல் - 179- அனித்திய விவேகம் வந்த பக்குவர்கள் இங்ஙனம் துறவை நாடுவார்கள் என்றது.
பாடல் -180 - அனித்திய விவேகம் வந்த பக்குவர்கள் விரைந்து துறவை நாடுவார்கள் என்றது.
பாடல் - 181 - உத்தமத் துறவியர் சுட்டறிவு நீங்கி என்றும் அருள்போதத்தில் இருப்பார்கள் என்றது.
பாடல் - 182 - உத்தமத் துறவியரின் அறிவு இச்சை செயல்கள் இவை என்றது.
பாடல் - 183 - உத்தமத் துறவியர் தேக உணர்வின்றி அருள் உணர்வில் இருப்பார்கள் என்றது.
பாடல் - 184 - உத்தமத் துறவியர் இத்தேகத்தில் இருப்பினும் அவர்களை அது கருதி பிரபஞ்சிகளைப்போல் எண்ணுதல் கூடாது என்றது.
பாடல் - 185 - உத்தமத் துறவியர்கள் பிரபஞ்சிகளின் உபசாரங்களை விரும்பார்கள் என்றது.
பாடல் - 186 - உத்தமத் துறவியர்கள் இத்தேகத்தையே மிகை எனக் கருதுவார்கள் என்றது.
பாடல் - 187 - உத்தமத் துறவியர்களின் பிறப்பு முத்திக்குரியது என்றது.
பாடல் - 188 - உத்தமத் துறவியர்களுர்களுக்கு பற்றற்ற தன்மையே பெருமை என்றது.
பாடல் 189 உண்மைத் துறவிகளின் சரியை, கிரியை, யோகம், ஞானம் இவை என்றது.

துறவு - - அதிகாரம் 7 முற்றும்.

அருளவத்தைத் தன்மை:

பாடல் - 190 - திருவருள் உதயமாகிய காலத்தில் உலகபோகங்கள் பொய்யாத் தோன்றும் என்றது.
பாடல் - 191 - பக்குவத்தார் திருவருளை இங்ஙனம் வேண்டி நிற்பார் என்றது.
பாடல் - 192- சுத்தாவத்தையில் நிற்போரின் தன்மைகள் இவை என்றது.
பாடல் - 193 - சுத்தாவத்தையில் நிற்போர்க்கு முத்தி அனுபவங்கள் இவை என்றது.
பாடல் -194 - கருவிகள் நீக்கியவிடத்து வருங்குணமும், தன்னை அறிந்தவிடத்து வருங் குணமும், திருவருள் தோன்றியவுடத்து வரும் குணமும், ஆநந்தந் தோன்றிய இடத்து வரும் குணமும் இவைகள் என்றது.
பாடல் - 195 - கருவிகள் பொய்யென்று அறிந்த விடத்து வருங்குணமும், திருவருள் உதித்த இடத்து வரும் குணமும் இவைகள் என்றது.
பாடல் - 196 - திருவருள் உதித்த நாளில் வரும் குணங்கள் இவைகள் என்றது.
பாடல் - 197 - திருவருளைப் பெறாது வீண்கழித்த காலத்தை நினைத்து பக்குவர்கள் இங்ஙனம் வருந்துவார்கள் என்றது.
பாடல் - 198 - அருள் மேலீட்டை உடையோர்க்கு பிறப்புக்கள் இல்லை என்றது.
பாடல் - 199 - அருள் மேலிட்ட போது ஞானிகளின் குணம் இவ்வாறு இருக்கும் என்றது.
பாடல் - 200 - அருள் மேலிட்ட போது ஞானிகளுக்கு ஆடலும் பாடலும் உண்டாகும் என்றது.
பாடல் - 201 - திருவருளைப் பெற்ற ஞானிகள் அருள் நிலையில் நிலைத்து நிற்பார்கள் என்றது.
பாடல் - 202 - திருவருளைப் பெற்ற ஞானிகள் நிருவிகாரிகளாய் இருந்து ஆடுவர் படுவர் என்றது.
பாடல் - 203 - பொய்த்துறவிகளின் உள்ளத்தை இறைவனே அறிவான் என்றது.
பாடல் - 204 - ஞானிகள் நகைப்பதும், ஆனந்தப்படுவதும் இவைகளுக்கு என்றது.
பாடல் - 205- ஞானிகள் பொய் உலக ஆசாரங்களைக் கண்டு நகைப்பார்கள் என்றது.
பாடல் - 206- ஜீவன் முத்தர்கள் மற்றும் பரமுத்தர்களின் நிலை இவ்வாறு என்றது.
பாடல் - 207- உலகத்தார் பழிச்சொல் ஞானிகளைப் பற்றாது என்றது.
பாடல் - 208- உலகியலாரும், சரியாதி மார்க்கத்தாரும் ஞானிகளின் பெருமையை உணரமாட்டார்கள் என்றது.
பாடல் - 209 - ஞானிகளின் உண்மைத்தன்மையை இந்திரன் முதலிய தேவர்கள் அறிந்து பணி செய்வார்கள் என்றது.
பாடல் - 210 - ஞானிகளுக்கு தேசம், இடம், குறியீடு முதலியவை இல்லை என்றது.
211 - ஞானிகளுக்கு குணமாறுபாடும், விரும்பிச்செல்லும் ஊரும் தவிர்க்கும் ஊரும் இல்லை என்றது.
பாடல் - 212 - ஞானிகளுக்கு எவ்விடமும் ஒன்றே என்றது.
பாடல் - 213 - ஞானிகளுக்கு தற்போதம் அற்ற இடமே கருத்து என்றது.
பாடல் - 214 - ஞானிகளுக்கு சமயம் மதம் முதலியவைகள் இல்லை என்றது.
பாடல் - 215 - ஞானிகளின் நடை உலகர் மற்றும் சமயிகள் நடையோடு பொருந்தாது என்றது.
பாடல் - 216 - ஞானிகளின் பெருமையை முழுவதும் கற்றுணர்ந்த பண்டிதராலும் அறிய இயலாது என்றது.
பாடல் - 217 - ஞானிகளுக்கு அருள் பெற்ற காலத்தில் தோன்றும் குணமும், அதை உணராத உலகத்தார் செயலும் இவை என்றது.
பாடல் - 218 - இல்லற ஞானிகளின் (குடும்ப வாழ்வில் இருந்துகொண்டே ஞானம் அடைந்தவர்கள்) தன்மைகள் இவை என்றது.
பாடல் - 219 - பெரும் சுகபேகம் உடையோராயினும் அதன்மீது பற்றின்றி இல்லற ஞானிகள் இருப்பர் என்றது.
பாடல் - 220- ஞானிகளுக்கு வினை உடல் ஊழாய் நீங்கும் என்றது.
பாடல் - 221- ஞானிகளுக்கு உண்டாகும் ஆகாமிய கர்மம் அவர்களுக்கு தொண்டு செய்வோர்பால் ஏகும் என்றது.
பாடல் - 222- ஞானிகளுக்கு நிகரான பேரின்பம் அடைபவர் யாரும் இல்லை என்றது.
பாடல் - 224- ஞானிகளுக்கு ஆச்சாரமாதி நியமங்கள் இல்லை என்றது.
பாடல் - 225- ஞானிகளுக்கு விதிவிருத்தங்கள் இல்லை என்றது.
பாடல் - 226 - ஞானிகளை ஞானிகள் விரும்புவார்கள் என்றது.
பாடல் - 227 - ஞானிகளின் திருமேனி அழகு இது என்றது.
பாடல் - 228 - ஞானிகளின் திருமேனி அழகு தன் கருத்தை விட்டு நீங்காது என்றது.
பாடல் - 229 - ஞானிகளுக்கு இவையெல்லாம் திருப்பெயர்கள் என்றது.
பாடல் - 230 - ஞானிகளின் இருவேறு வகை என்றது.
பாடல் - 231 - துறவு நெறியை கைக்கொண்டோர் அந்த நிலையில் வழிவாமல் நிற்க வேண்டும் என்றது.

அருளவத்தைத் தன்மை - அதிகாரம் 8 முற்றும்.

வாதனை மாண்டார் தன்மை:

பாடல் - 232 - தற்போத இழப்பே ஞானம் பெற வழி என்றது.
பாடல் - 233- தற்போத இழந்த இல்லறத்தாரும் பிறப்பை நீக்கலாம் என்றது.
பாடல் - 234 - உண்மைத்துறவு என்பது இது என்றது.
பாடல் - 235 - பற்று அற்றார்க்கே பிறப்பறும் என்றது.
பாடல் - 236 - இல்லற ஞானிகள் பிரபஞ்ச போகத்தை அனுபவித்தாலும் அதில் பற்றின்றி இருப்பார்கள் என்றது.
பாடல் - 237 - இல்லற ஞானிகள் எப்போதும் பாசங்கள் தம்மிடம் பற்றாது இருப்பர் என்றது.
பாடல் - 238- இல்லற ஞானிகள் மீண்டும் பிறப்பில்லை என்றது.
பாடல் - 239 - இல்லற ஞானிகள் எச்செயல்களிலும் திருவருள் சிந்தையினராய் இருப்பார்கள் என்றது.
பாடல் - 240 - இல்லறத்தில் இருந்து முத்தி, சித்தி பெற்றோர்கள் இன்னார் என்றது.

வாதனை மாண்டார் தன்மை - - அதிகாரம் 9 முற்றும்.

நிலை இயல்பு:

பாடல் - 241 - கருவி கரணங்களை திருவருள் போதத்தால் அடக்க வேண்டும் என்றது.
பாடல் - 242 - ஆன்மபோதம் ஜீவியாது அருட்போதத்தை நாடி நின்றால் அருளை அறியலாம் என்றது.
பாடல் - 243 - ஆன்மபோதத்தால் கேவல, சகலங்களை நீக்க இயலாது என்றது.
பாடல் - 244- அருட்போதரானேரின் தன்மை இது என்றது.
பாடல் - 245 - சிவாத்வைதம் பெற அனுபவப் படிகள் இவைகள் என்றது.
பாடல் - 246 - அறிவு அருளோடு கூடி இருக்க வேண்டும் என்றது.
பாடல் - 247 - துறவு நெறி அடையும் முன் ஏற்படும் அனுபவம் இவை என்றது.
பாடல் - 248 - எந்நிலை சிவயோகம் என்று கூறியது
பாடல் - 249 - சச்சிதானந்த நிலை இது என்றது
பாடல் – 250 - பஞ்சமலங்கள் நீங்க உபாயம் இது என்றது
பாடல் – 251- சலக கேவலங்களில் இருந்து சத்குரு சீடனை மீட்டு சுத்தத்தில் வைப்பார் என்றது.
பாடல் - 252 - ஒழிவிலொடுக்கம் கூறும் வழியே உண்மை முத்திக்கு உபாயம் என்றது
பாடல் - 253 - திருஞானசம்பந்தப் பெருமானைத் தான் என்றும் துதித்து வழிபடுவேன் என்றது .

நிலை இயல்பு -- அதிகாரம் 10 முற்றிற்று.

ஒழிவிலொடுக்கம் முற்றிற்று.



இராமலிங்காய நம: இராமலிங்காய நம: இராமலிங்காய நம:

Audio:

27 Comments
ram govi
Great Accomplishment Anandha Bharathi
Monday, January 29, 2018 at 00:00 am by ram govi
babu marimuthu
Great Work ThriruValar Anandabharathi Aiyya. Arutperumjothi. Daieou.
Monday, January 29, 2018 at 06:31 am by babu marimuthu
Anandha Barathi
Thank you, in future you can find all 250+ Songs here in the same place with our Vallalār grace
Tuesday, January 30, 2018 at 11:28 am by Anandha Barathi
Vallalar Groups
வாழ்த்துக்கள் !!!!!!!
Wednesday, January 31, 2018 at 03:41 am by Vallalar Groups
mahesh mm
thank for ur job
Tuesday, February 20, 2018 at 04:17 am by mahesh mm
mahesh mm
nanri ayya
Thursday, February 22, 2018 at 23:31 pm by mahesh mm
Anandha Barathi
இவ்வுரை விளக்கப்பணிக்கு ஊக்கம் அளித்துவரும் வள்ளல் பெருமான் திருவருளுக்கும், மெய்ஞ்ஞான அன்பர்களுக்கும் நன்றி, இப்பணி இனிதே முழுமையும் நிறைவுற தங்களின் வாழ்த்தையும், பிரார்த்தனையையும் வேண்டுகின்றோம்.

வணக்கம்.
Sunday, February 25, 2018 at 05:38 am by Anandha Barathi
mahesh mm
nanri ayya
Sunday, February 25, 2018 at 21:23 pm by mahesh mm
kanagaraj  M
thank you anna for such great work with vallalar blessing !
Saturday, March 3, 2018 at 05:40 am by kanagaraj M
mahesh mm
nanri ayya
Sunday, March 4, 2018 at 23:22 pm by mahesh mm
Anandha Barathi
Dear All, By vallalar grace Ozhivilodukkam first chapter (பொதுவிலுபதேசம் -முதல் அதிகாரம்) 63 songs completed successfully.The same uploaded in this link.

I request your all prayers for complete the holy work.
Also you can share your feedback and comment if any.

From next week you can find here the Second part audios.
Thanks.
Monday, March 5, 2018 at 09:53 am by Anandha Barathi
Vallalar Groups
அற்புதமான பணி செய்யும் ஆனந்த பாரதிக்கு வள்ளற்பெருமான் துணை நின்று, எல்லா நலன்களையும் கொடுக்க ஆண்டவரைப் பிரார்த்திப்போம்.
Sunday, March 11, 2018 at 10:14 am by Vallalar Groups
Anandha Barathi
மிக்க நன்றி அய்யா, வள்ளற்பெருமானின் திருவருள் துணை.
Monday, March 12, 2018 at 13:11 pm by Anandha Barathi
Anandha Barathi
வணக்கம், பாடல்கள் 145 வரை உரையுடன் புதிய ஒலிநூல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது, அன்பர்கள் செவிமடுத்து பயன்பெறுக, நன்றி.
Saturday, May 26, 2018 at 08:12 am by Anandha Barathi
Dr.Sabapathy Sivayoham
Great work aiya Ananda Barathi. May ArudJothi Vallal Peruman bless you.
Sunday, May 27, 2018 at 16:37 pm by Dr.Sabapathy Sivayoham
Anandha Barathi
Thanks Ayya Dr. Sabapathy, It’s really a holy opportunity to me, We are praying our vallalar for the successful project completion.
Tuesday, May 29, 2018 at 07:34 am by Anandha Barathi
ram govi
GREAT DEED BHARATHI!!!!
Saturday, June 16, 2018 at 19:06 pm by ram govi
mahesh mm
nandri ayya
Monday, July 23, 2018 at 05:52 am by mahesh mm
Anandha Barathi
வணக்கம், பாடல்கள் 242 ( நிலை இயல்பு) அதிகாரம் வரை உரையுடன் புதிய ஒலிநூல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது, அன்பர்கள் செவிமடுத்து பயன்பெறுக, நன்றி.
Saturday, September 29, 2018 at 15:43 pm by Anandha Barathi
Anandha Barathi
வணக்கம்,

ஒழிவிலொடுக்கம் முழு நூலும் (பாடல்கள் 253 ‍ 10 அதிகாரம்) சிதம்பர சுவாமிகள் உரையுடன் ஒலிநூல்கள் MP3 முழுவதும் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது, அன்பர்கள் செவிமடுத்து பயன்பெறுக.


இப்பணி இனிதே நிறைவடைய அருள்புரிந்த வள்ளல் பெருமானின் தனிப்பெருங்கருணைக்கும் அவரின் திருவடிகளுக்கும் வந்தனம்! வந்தனம்! வந்தனம்!

நன்றி.
Tuesday, October 9, 2018 at 15:34 pm by Anandha Barathi
MK Narayanan
Great Work Bharathi Ayya! Great Service to Sanmarga Anbars! I personally feel this work is also one of the important milestone in Sanmarkkam. Thank Vallal Perumaan for choosing you to accomplish this. Pray Vallal Perumaan to bless you with Grace and abundant Wisdom!

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Wednesday, October 10, 2018 at 09:54 am by MK Narayanan
Anandha Barathi
மிக்க நன்றி அய்யா, வள்ளல் பெருமானின் திருவருள் பெருங்கருணைக்கு வந்தனம்.
Thursday, October 11, 2018 at 05:41 am by Anandha Barathi
Tamilvanan
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
மிக்க நன்றி.
Sunday, October 28, 2018 at 02:59 am by Tamilvanan
Bala Anand
அருமை அருமை..... வள்ளல் பெருமானின் திருவருள் கருணையால் தான் நீங்கள் இந்தப் பணியை செய்திருக்க முடியும். மிக்க நன்றி ஆனந்த பாரதி அய்யா🙏.
Thursday, December 13, 2018 at 07:40 am by Bala Anand
Anandha Barathi
தாங்கள் சொன்னது முற்றிலும் உண்மை அய்யா, நன்றி.
Tuesday, December 18, 2018 at 06:52 am by Anandha Barathi
Anandha Barathi
வள்ளல் பெருமான் பதிப்பித்த இரண்டாவது நூலான சின்மய தீபிகையையும் மேற்க்கண்டபடி ஒலி நூலாக்கும் பணி பெருமான் திருவருளால் ஆயத்தமாகி வருகின்றது,
இப்பணியும் நன்முறையில் நிறைவுற பெருமான் திருவருள் செய்ய அன்பர்கள் பிரார்த்திக்க அன்போடு வேண்டுகின்றோம்.

நன்றி.
Tuesday, December 18, 2018 at 06:56 am by Anandha Barathi
Hariharan Elumalai
அரிய பணி. திருவருளாலும் குருவருளாலம் இப்படி இனிதே நிறைவேற வாழ்த்துக்கள். வள்ளல் பெருமானின் திருவுள்ளக் குறிப்பாலேயே இது நிகழ்வதாகத் தோன்றுகிறது.
Wednesday, December 19, 2018 at 01:16 am by Hariharan Elumalai